பாவேந்தல்
பாலமுனை பாறூக்
பாவேந்தல்
பாலமுனை பாறூக்
அக்கினிச் சிறகுகள் இதழ் - 23
நேர்காணல் வினாக்கொத்து
1. உங்களை பற்றிய ஒரு அறிமுகம்?
நான் ஆர். எம். நௌஸாத்..கிழக்கு இலங்கையின் சாய்ந்தமருது என்ற ஊரில்
1960இல் பிறந்து வசிக்கின்றேன்.. தொழிலால், ஒரு அஞ்சல் அதிபர்..தற்போது
ஓய்வு பெற்றுள்ளேன். மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் வாழ்ந்து வருகிறேன்...
தீரன் என்பது என் புனைபெயர்..
2. உங்களது படைப்பிலக்கியப்பணிகள் என்னென்ன
துறைகளில் இயக்கம் பெற்றுள்ளன...?
கவிதை, சிறுகதை, புதினம், இதழியல். நாடகம், பத்தி எழுத்து என்று சுமார் 35 வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கி
வருகின்றேன்..
3. வெளியீடுகள் பற்றிக் கூறுங்களேன் ...
1983 தொடக்கம் 1989 வரை தூது என்ற பெயரில் கவிதைச் சிற்றேடு
ஒன்றினை 16 இதழ்கள் வெளியிட்டேன்..
மேலும், வல்லமை தாராயோ..
வெள்ளிவிரல், தீரதம் ஆகிய மூன்று சிறுகதை நூல்களும், நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, வக்காத்துக் குளம்,
ஆகிய மூன்று நாவல்களும்,
ஆழித்தாயே அழித்தாயே..., குறு நெல், அபாயா என் கறுப்பு
வானம், முத்திரையிடப்பட்ட
மது, என்னும் நான்கு சிறிய,பெரிய கவிதை நூல்களும் இதுவரை வெளிவந்துள்ளன...
4. உங்கள் எழுத்தும் இலக்கியமும் எவற்றை நோக்கி
பயணிக்கின்றன அல்லது எவை சார்ந்து செயற்படுகின்றன?
என்னுடைய
தனிப்பட்ட எழுத்தாலும் இலக்கியத்தாலும் உலகில் மாபெரும் மாற்றங்கள் நிகழும்
என்றெல்லாம் என்னை நான் ஏமாற்றிக் கொள்ள
விரும்பவில்லை.. ஆயின், உலகில், பல்வேறுபட்ட எழுத்தால், இலக்கியத்தால், அவ்வாறு ஏதும் சமுக மாற்றங்கள் ஏற்படுமிடத்து நாமும்
ஓர் அணுவளவு பங்களிப்பை அதற்குச் செலுத்த முடியும் என்று நம்புகின்றேன்.. அதை
நோக்கிப் பயணிக்கின்றேன்..
5. தொழில் ரீதியாக ஒரு 'தபால் நிலைய அதிகாரி' என்ற வகையில் இலக்கிய ஈடுபாடு மற்றும் எழுத்தார்வம்
என்பவற்றுக்கிடையிலான தொடர்புகள் எவ்வாறானவை?
ஓர் அஞ்சல்
அதிபருக்கு பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.. உதவிப்பணம் பெற வரிசையில்
காத்திருக்கும் வயோதிபர்கள், நோயாளிகள், தொழில்வாய்ப்பு,கல்வி, காதல்
கடிதங்களுக்கு வாசலில் காத்திருக்கும் இளைஞர்கள், அரச சுற்று நிருபங்களுக்குள் தம்
வாழ்வை புதைத்துக் கொண்ட அரச அதிகாரிகள், வாக்காளர் அட்டை வாங்க விற்க வரும்
அரசியல்வாதிகள்..வெளிநாட்டு,காசோலைக்கும் பணத்துக்கும் ஏங்கி நிற்கும் ஜீவன்கள்,
... அப்பப்பா...ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் சிறுகதைகள்..கவிதைகள்....’கரு’வுக்குப்
பணமேயில்லாத கதைக்களங்கள்...
5. நவீன இலக்கியத்தில் 'நாவல் இலக்கிய வாசிப்பு' பற்றிய தங்களது சமூகம் சார்ந்த புரிதல் என்ன?
நாவல்
இலக்கியம் தன் அந்திம காலத்தை எட்டி விட்டதாகவே எண்ணுகிறேன்.. நாவல் வாசிப்போரின்
எண்ணிக்கை நன்றாக குறைந்து விட்டது.. நீண்ட நேர வாசிப்புக்கு இப்போது மனிதர் தயாராக
இல்லை.. இது, “பாஸ்ட்பூட்’
காலம்...பத்து வரி வாசித்து விட்டு பறந்து போய் விடுகிறார்கள்..
6. உங்கள் நூல்கள் பெற்றுள்ள விருதுகள் பரிசுகள் பற்றிய
நூற்குறிப்புக்கள்?
2009 இல்,‘நட்டுமை’ நாவல் தமிழ்நாடு காலச்சுவடு சஞ்சிகை நடத்திய ‘சுந்தர ராமசாமி 75’ பவழவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது 2014
இல், ‘வக்காத்துக்குளம்’ என்ற குறுநாவல் ‘அக்கினிக்குஞ்சு’ இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில்
மூன்றாம் பரிசு பெற்றது.
2011ல் ‘வெள்ளிவிரல்’ என்ற என் சிறுகதைத் தொகுதிக்கு, இலங்கை அரசின்
தேசிய அரச சாகித்திய விருதும், கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்தன.
மேலும் பல சிறுகதைப் போட்டிகளில் பல பரிசில்கள்
சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளன ..
7. 'கலை இலக்கிய வாசிப்பும் சமூகத்தின் பண்பாட்டு
கலாச்சார எழுச்சியின் மீள்வாசிப்பும்' குறித்த உங்களது அவதானங்கள் எவை?
முன்னர் நான்
சொல்லியபடி, 'கலை இலக்கிய வாசிப்பால்
சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார எழுச்சி என்பதெல்லாம் உடனடிச் சாத்தியங்கள் அல்ல,,நமது
பணிகளை நாம் செய்து கொண்டே போவோம்.. மாற்றங்கள் அது பாட்டில் மாறிக்கொண்டே வரும்..
ஒரு பொறி ஒரு வனத்தைக் கொளுத்தும். ஒரு சொட்டு நீர் ஒரு காட்டை விதைக்கும்...
8. அக்கினிச் சிறகுகள் சஞ்சிகை மற்றும் அதன்
செயற்பாடுகள் குறித்து நீங்கள் கூற நினைப்பது?
அக்கினிச் சிறகுகள் அழகான சொல்.. மிகச் சமீபத்தில்தான் அக்கினிச் சிறகுகளின்
தளத்தைப் பார்வையிட்டேன்.. மிக வியப்படைந்தேன் .. கலை இலக்கிய செயற்பாடுகளில் இவர்களின்
தேடலும், கூர்மைமிக்க பார்வையும் கண்டு அதிசயித்தேன்.. இது புதிய இளைஞர்களின் தளம்..
அக்கினிச் சிறகுகள் அகல விரித்து மேலும் உயர்ந்து ஆகாய எல்லை தொட ஆசிக்கின்றேன்..
‘..........நான் யதார்த்தத்தினையே எழுதுகிறேன் ...’–
கிழக்கிலங்கையின் மண்வாசனை அமைப்பியலினையும்
நிலவரசியல் தொடர்பாடலினையும் படைப்புக்களின் ஊசலாட்டத்தில் சாமர்த்தியமாகக்
கடத்தியவர் தீரன் ஆர். எம். நௌஷாத்.
நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, வக்காத்துக் குளம்- இவரது நாவல்கள். வெள்ளி விரல், தீரதம் சிறுகதை தொகுப்புகள்.நட்டுமை நாவலானது காலச்சுவடு அறக்கட்டளையின் ‘சுந்தர ராமசாமி- 75’ இலக்கியப் போட்டியில் முதலிடம் பெற்றது.
நிலஉடமைகளை அடிப்படையாகக் கொண்ட மண்னையும் மக்களையும் பாத்திரங்களாகக் கொண்டு அதற்கான தூல வடிவத்தினை கதை நகர்த்தலின் யுக்திகளாக செதுக்கிய தீரனின் மொழியுலகம் அலாதியானது.தனக்கான தனித்துவ பாணியினை தீரன் எப்போதுமே தழுவியிருந்தார். பாமரர்களின் அன்றாடச் சொற்களிலிருந்து காவியத்தன்மையினை கண்டடையும் கதை சொல்லல் போக்கும், மறைந்து விடாத காதலின் சூடும் தீரனின் எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன.
கொந்தழிப்பு நிறைந்த பெண் பார்வையினை அசால்டாக கடந்து செல்லும் தீரனின் கதைகளில் நிரம்பி வழியும் பாலியல் பஸ்மங்கள் ரசமானவை. அதனைச் சொல்வதற்கென்றே தீரன் தனியாக மொழியினை வடிவமைத்திருக்கிறார். அம்மாதிரியான மொழி தீரனுக்கு வாய்த்திருக்கிறது என்றே கூற வேண்டியிருக்கிறது.
கேள்வி: படைப்பிலக்கியங்கள் எழுதப்படுவதில்
அரசியலிருக்கிறது எனும் வகைப்பாட்டினூடாக உங்களது ‘கொல்வதெழுதுதல் 90’ நாவல் முஸ்லிம்
அடையாள அரசியலை வெளிப்படையாக பேச முயன்றிருக்கிறது. இவ்வகையில் இப்பிரதியின் உள்ளே
பண்பாட்டு கதையாடல்களையும் அரசியலினையும் எம்மாதிரியாக புகுத்துனீர்கள்?
கேள்வி: பள்ளி முனை கிராமத்தின் கதை ஏன்
கொல்வதெழுதுதல் 90 ஆக
மாறியது?
கேள்வி: வயல் நிலவுடைமை சார்ந்த மக்களின்
வாழ்வியல் குறித்த பல கோணங்களை நட்டுமை நாவல் பேசுகிறது. கிழக்கிலங்கையின்
மாற்றொரு இலக்கிய முகமாகவும் இருக்கிறது. நட்டுமையில் பயன்படுத்தப்பட்டிருக்கும்
பிரதேச வழக்கு மொழி பெரு ஆய்வுக்குரியது. இங்கு பல படைப்பாளிகள் பிரதேசத்து மொழி
வழக்கினை படைப்பிலக்கியங்களில் எழுத முனைந்து தோற்றுப் போயுள்ளனர். தீரனை
பொறுத்தவரையில் பிரதே வழக்கு மொழி நட்டுமையில் வெற்றி கண்டிருக்கிறது எனலாம்.
இம்மாதிரியான மொழி அழகினை படைப்புக்குள் எப்படி உட் செலுத்தினீர்கள்?
நட்டுமை என்ற பெயர் எப்படி வந்தது என்பது
சுவாரஷ்யமானது. வயல்காரர்களிடமிருந்துதான் அதனைப் பெற்றுக் கொண்டேன். நட்டுமை
என்பது களவுவழி செயற்பாட்டினை குறிக்கிறது. வயல்நிலங்களில் களவுத் திருப்பலின்
ஊடாக நீரை மாற்றி விடுவதற்கும், கிராமிய மக்களின் வாழ்வியலில் கள்ள உறவினை நாசூக்காய்
சொல்வதற்கும் நட்டுமை என கூறுவர். நட்டுமையினை பல தடவைகள் திருத்தியுள்ளேன்.
எனக்கு திருப்தியடையும் வரை படைப்புக்களை திருத்திக் கொண்டேயிருப்பேன்.
இவற்றையெல்லாம் பாவலர் பஸீல் காரியப்பரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.
கேள்வி: நீங்கள் முதல் முதலாக எழுதி வெளிவந்த சிறுகதை பற்றி சொல்லுங்கள்?
கேள்வி: இலக்கிய படைப்புக்கள் வெவ்வேறு
கோணங்களில் பல காலகட்டங்களில் இயக்கம் கண்டிருக்கின்றன. தீரனின் இலக்கிய உலகம்
எந்தக் கோணங்களிலானது? பாத்திரங்களின் வடிவமைப்பு எம்மாதிரியானது?
கேள்வி: தீரனின் கதைகளில் பெண்களைச்
சீண்டுதலுடன் பாலியல் வேட்கையும் அதிகமாயிருக்கிறதே?
கேள்வி: வெளிப்படையாக கிராமிய மக்களின் தூஷண மொழியினையும், கள்ள உறவுகள் குறித்தும் ஔிவு மறைவின்றி எழுதியிருக்கிறீர்கள். படைப்பிலக்கிய போக்கில் இவ்வகைப்பாட்டினை வெளி வாசகர்கள் எப்படியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
கேள்வி: இலக்கிய வாதிகளுடனான உறவுகளிலும், சந்திப்பிலும் தீரன்
அதிகமாக கலந்து கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டிருக்கிறதே?
கேள்வி: விருதுகளை நிராகரித்தல், வெளியீட்டு
நிகழ்வுகளை மறுத்தல் என தீரனின் இலக்கிய போக்கு தனித்துவமானது. ஆகவே தீரன் எதனை
நோக்கி எழுதுகிறார்? அது
ஆத்ம திருப்திக்கான இலக்கியமா?
கேள்வி: பாவலர் பஸீல் காரியப்பர் மீதான
உங்களது உறவு நெடியது. அது பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
கேள்வி: போர் பற்றியே இலங்கையில் அதிகம் எழுதப்பட்டிருக்கிறது. இது குறித்தே பேசப்பட்டிருக்கிறது. இதனால் பிற பேசுபொருளை கொண்ட படைப்பிலக்கியங்கள் பேசப்படாமல் இருந்திருக்கின்றனவா?
00
தினக்குரல் வாரமலர்
23.12.2018
===============
பா.மோகனதாஸ்
01) கேள்வி :- கவிதை,சிறுகதை,கட்டுரை,நாவல்,காவியம்,உருவகக்கதை,குறும்பாக்கள் என பல்துறைகளில் தடம் பதித்த நீங்கள்
இலக்கியத்துறைக்குள் வந்தது, ஆசையுடனா ஆவலுடனா அல்லது ஏதேச்சையாகவா ?
02) கேள்வி :- ஜீவநதி
வெளியீடாக 2017 இல் ஒய்த்தா மாமா,கள்ளக்கோழி,மறிக்கிடா,பொன்னெழுத்துப் பீங்கான்,அணில்,தீரதம்,காக்காமாரும் தோழர்களும்,மும்மான்,கபடப்பறவைகள்,ஆத்துமீன் ஆசை ஆகிய சிறுகதைகள் அடங்கிய தீரதம் சிறுகதைத்
தொகுதி யதார்த்த வாழ்வியலை புடம்போடுகிறது. அதிலும் ஒரு படைப்பாளன் இறந்ததையிட்டு
நிகழும் சம்பவங்களைக் கொண்டதாக கபடப் பறவைகள் சிறுகதை அமைகிறது. அவ்வகையில்
இக்கதையின் பின்னணி சூட்சுமம் பற்றி கூற முடியுமா ?
03) கேள்வி :- வெள்ளிவிரல்,வல்லமை தாராயோ, தீரதம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் நட்டுமை , கொல்வதெழுதுதல் 90, வக்காத்துக் குளம் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ள நீங்கள், ஆக்க இலக்கியங்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டுமெனவும்
கருதுகின்றீர்கள் ?
03) கேள்வி :- நூல்கள் எழுதி
வெளியீட்டுக்கொண்டிருந்த நீங்கள் 2015 இல் அபாயா என் கறுப்பு வானம் என்ற மின் நூல்
கவித்தொகுப்பினை கொணர்ந்ததன் நோக்கம் ?
https://www.pratilipi.com/theeran-r-m-nawshad/abaya-en-karuppu-vaanam......................என்னும் தளத்தில் காணலாம்
0) கேள்வி :- நீலாவணன் போன்ற
ஒரு சிலரே காவியத்தில் கை தேர்ந்தவராகவுள்ளனர். அவ்வகையில் உங்களின் அழித்தாயே
ஆழித்தாயே எனும் சுனாமி கடற்கோள் காவியம் உருவாகிய விதம் தொடர்பாக கூற விழைவது ?
06) கேள்வி :- நட்டுமை
நாவலுடாக வாசகர்களை கிராமத்திற்குள் ஊசலாடவிட்டதென் பின்னணி பற்றி கூற முடியுமா ?
ஈழத்தினுள் முடங்கிக் கிடந்த
இலங்கை நாவல் துறையை தமிழ் நாட்டை நோக்கி நகர வைத்த பெருமை இந் நாவலுக்குண்டு என பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
மொழித் துறையில் தமிழ் சிறப்புக் கலைமாணி இறுதித் தேர்வுக்காக, ‘கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியலைத்
தெளிவுறுத்தும் நட்டுமை நாவல்
சமூகவியலடிப்படையிலான விமர்சன நோக்கு “ என்ற தலைப்பில் இந் நாவல் மாணவன் முகமத் அஸ்மத் தினால் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்| மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். http://naddumai.blogspot.com/ என்ற தளத்தில் நட்டுமை பற்றிய முழு விபரத்தினையும் காணலாம்
..
07)கேள்வி;- ‘கொல்வதெழுதல்90’ நாவல் உருவாகவேண்டியதன் பின்னணி என்ன?
பள்ளிமுனைக் கிராமத்தின் கதை| என்ற பெயரில் தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் 40 அங்கங்களாக ஒரு அரசியல் விவரணத் தொடராக 1990 களின் தென் கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக பிரசுரமானது இது.. அக்காலத்து யுத்த அரசியல் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின் வாழ்வியல் பற்றிய இவ்விவரணம் பின்னர் நண்பர்களான எம். பௌசர்.. எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக உருவெடுத்தது. இது மேலும் செவ்விதாக்கப்பட்டு ~கொல்வதெழுதுதல். 90| என்ற தலைப்பு மாற்றத்துடன் காலச்சுவடு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது..
தமிழ் நாட்டில் எஸ்.
ராமகிருஷ்ணன் 2000க்குப் பின் வெளியான
முக்கியமான தமிழ் நாவல்களில் இதுவும் என்று என சிலாகித்துப் பேசியிருக்கிறார்..
ஆயின் இலங்கையில் .... ? இதன் உள்ளடக்கம் கிழக்கு முஸ்லிம் அரசியல் என்பதால் சில
"யாழ்-விற்பன்னர்களால்" ஒதுக்கப்பட்டது...நம்ம
"பேராசிரியர்களாலும்" ஒரு வித்துவப் பெருமை காரணமாக கண்டுகொள்ளப்படாமல்
ஆனது......இப்படி இன்னும் சில "பெரிய (?)எழுத்தாளர்களின்" புறக்கணிப்புகளாலும்
பொறாமைத்தனங்களாலும் மனம் காய்ந்து போன நான் கோபத்துடன் இன்னமும் சிரித்துக்
கொண்டிருக்கிறேன்...... http://kolvatheluthuthal.blogspot.com/ இத்தளத்தில் இந்நாவல் பற்றி விரிவான தகவல்கள் பெறமுடியும்
தவிரவும் வாசகனுக்கு சொல்லவேண்டிய செய்தி என்னவாக இருப்பினும் வாசகனைக் கதைக்குள் ஈர்த்தல் முக்கியமானது. அதற்கு
வித்தியாசமான வாசல்கள் திறக்கப்படல்வேண்டும்.. வாசகனின் கவனம் நமது எழுத்தால்
திருடப்படும் போது நமது செய்தியை அவனது
உள்ளத்தில் இலேசாக ஊன்றிவிட முடிகிறது.. இது எனது தனிப்பட்ட உத்திதான். கதை சொல்லிகளிடையே
வேறுபாடுகள் உண்டு..
10) கேள்வி : இளந்தலைமுறையினருக்கு எழுத்திலக்கியத் துறை
சார்ந்து கூற விழைவது ?
௦௦௦